இந்தியாவின் பலம்! அக்னி-5, இந்தியா!!!,ஏவுகணை!!,ஆயுதம்!,ராணுவம்!

இந்தியாவின் பலம்.
                        ராணுவ வலிமையில் பலமிக்கதாக இந்திய ஆயுத பலம் மாறியிருக்கிறது, அக்னி 5 ஏவுகணை மூலம்!அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது..
அக்னி ஏவுகணை 17.5 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை திட எரிபொருளால் இயக்கக் கூடியது. இதனால், இதை மிக எளிதாக ராணுவ வாகனங்களில் எந்த இடத்துக்கும் கொண்டு சென்று ஏவ முடியும்.சுமார் 1.5 டன் (1,500 கிலோ) எடை கொண்ட அணு குண்டையோ அல்லது வேறு ஆயுதங்களையோ இந்த ஏவுகணையால் ஏந்திக் கொண்டு 5,000 கி.மீ. வரை பயணிக்க முடியும் (உண்மையில் இது 8000 கிமீ என்கிறது சீனா). மூன்று பாகங்களைக் கொண்ட இந்த ஏவுகணை, ஏவப்பட்டவுடன் முதலில் பூமியிலிருந்து 40 கி.மீ. உயரத்தை அடையும். அத்தோடு அதன் முதல் பகுதி ராக்கெட் தனியே கழன்றுவிடும்.இதையடுத்து அதன் இரண்டாவது ராக்கெட் செயல்பட்டு அதை மேலும் 150 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும். இதன் பின்னர் அதன் 3வது ராக்கெட் இயங்கி அதை மேலும் 800 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும்.இந்த உயரத்தை அடைந்த பின்னர் ஏவுகணையில் உள்ள கம்ப்யூட்டர்கள், செயற்கைக் கோள் மற்றும் ரேடியோ சிக்னல்கள் உதவியோடு, அதை தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை நோக்கித் திருப்பும்.இதையடுத்து அடுத்த 18 நிமிடங்களில் இந்த ஏவுகணை 5,000 கி.மீ. தூரத்தைக் கடந்து குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும்.3வது கட்ட ராக்கெட் செயல்பட ஆரம்பிக்கும்போது இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட 24 மடங்கு அதிகமானதாக இருக்கும். அதாவது, போர் விமானங்களை விட சுமார் 30 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மட்டும்தான் இத்தகைய திறன் கொண்ட ஏவுகணைகள் உள்ளன. இப்போது இந்தத் திறனைப் பெற்றுள்ள 5வது நாடு இந்தியாவாகும். இந்த ஏவுகணைக்கான தொழில்நுட்பத்தை இந்தியா, வேறு எந்த நாட்டு உதவியும் இல்லாமல் சுயமாக தானே உருவாக்கியுள்ளது என்பதுதான் மிக முக்கியமானது.